×

திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் விராலிமலை வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் பிரசாரம்

விராலிமலை, மார்ச் 24:விராலிமலை சட்ட மன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் விராலிமலை கிழக்கு ஒன்றிய பகுதிகளான மேலபச்சகுடி. குமரப்பட்டி,மதயானை பட்டி,மாத்தூர், குமாரமங்கலம். மண்டையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று வாக்குகள் சேகாித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களின் கோரிக்கைகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என கூறிய அவர்.

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஸ்டாலின் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, 100 நாள் வேலைதிட்டம் 150 நாளாக உயர்த்தி 300 ரூபாய் சம்பளம், சமையல் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார். . பொதுமக்களாகிய உங்களை நம்பிதான் உங்கள் வீட்டு பிள்ளையாக உங்களை நம்பி களத்தில் நிற்கிறேன். ஆகவே எனக்கு உதயசு+hpயன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். இதில் விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Viralimalai ,Tennalur Palaniappan ,DMK ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்